அல்லு அர்ஜுனின் அடுத்த படம் சரித்திரப் படம்? | அம்மா ஆகப் போகும் கியாரா அத்வானி : வாழ்த்திய சமந்தா, ராஷ்மிகா | நான் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது : அமிதாப்பச்சனின் பதிவால் பரபரப்பு! | கிரிப்டோ கரன்சி முறைகேடு குற்றச்சாட்டு : தமன்னா விளக்கம் | இர்பான் கான் நினைவாக தங்கள் கிராமத்திற்கு புதிய பெயர் சூட்டிய மக்கள் | கருப்பை வெள்ளையாக்க அதிக படங்களில் நடிக்கிறேனா? : டென்ஷனான வாரிசு நடிகர் | ராஜ்குமாரின் 50வது பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆகும் அப்பு | 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த மோகன்லால், சீனிவாசன் கூட்டணி | தகராறை முடித்துக் கொண்ட கங்கனா ரணவத், ஜாவேத் அக்தர் | கெட்டிமேளம் தொடரில் என்ட்ரி கொடுக்கும் கன்னட நடிகை |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சித்து, ஸ்ரேயா அஞ்சன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. விறுவிறுப்பான திரைக்கதையுடன் டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி என்பவர் இயக்கி வந்தார்.
இவர் நடிகர்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் பிரச்னை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர் பிரதாப்பை அதிரடியாக சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். பிரதாப்பிற்கு பதிலாக இயக்குநர் ஜீவா தான் வள்ளியின் வேலன் தொடரை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.