ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலெட்சுமி தொடர் கடந்த 2020ம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்து கிட்டத்தட்ட 1200 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த சீரியெலுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த தொடர் முடிவுக்கு வர இருப்பதாக சின்னத்திரை வட்டாரங்களில் பேச்சு அடிப்பட்டு வருகிறது. அத்துடன் தொடரின் நாயகன் சதீஷும் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'பாக்கியலெட்சுமி என்கிற பப்ளிக் எக்ஸாம் முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது. நான் பாஸா பெயிலா? என்பது ரசிகர்கள் உங்கள் கையில் தான் இருக்கிறது. மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்துவிட்டேன். ஆனாலும், தொடர்ந்து முயற்சிப்பேன்' என்று கூறியிருக்கிறார். இதன்மூலம் பாக்கியலெட்சுமி தொடர் முடிவுக்கு வருவது உறுதியாகிவிட்டது.