தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் |

வானொலி நிகழ்ச்சி வர்ணனையாளாரக மக்கள் மனதில் இடம்பிடித்த மிர்ச்சி செந்தில் அதன்பின் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகராக செந்திலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவே தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார். சரவணன் மீனாட்சி தொடரில் தன்னுடன் ஜோடியாக நடித்த ஸ்ரீஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ஸ்ரீஜா நடிக்கவில்லை. குடும்பத்தை பார்த்துக் கொள்கிறார். செந்தில் ஜீ தமிழில் அண்ணா தொடரில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், செந்தில் தற்போது புதிதாக கபே பிசினஸில் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், 'திருவல்லாவில் கபே ஒன்று விலைக்கு வந்தது. ஸ்ரீஜா அதை வாங்கி நடத்தலாம்னு சொன்னாங்க. நானும் ஓகே சொல்லிட்டேன். ஆனால், வேலை அதிகமாயிடுச்சு. முன்னாடி படப்பிடிப்பு முடிஞ்சதும் வீட்டுக்கு போய்டுவேன். இப்ப கேரளாவுக்கு சென்று கபே வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. மற்றபடி நிர்வாகம் அனைத்தும் ஸ்ரீஜா தான் பாத்துகிறாங்க' என அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.