திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம் மற்றும் தயாரிப்பு என பிசியாக இருக்கும் அவர் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக அவரின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‛‛எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை தனுஷ் எடுத்துள்ளதால், அடுத்து நடிகர் தனுஷ் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.