காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் தனுஷ். நடிப்பு மட்டுமின்றி இயக்கம் மற்றும் தயாரிப்பு என பிசியாக இருக்கும் அவர் முழுக்க முழுக்க புது முகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் 21ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புதுமுக நடிகர்கள் தேடப்படுவதாக போலியாக விளம்பரம் செய்யப்பட்டு மோசடி நடைபெறுவதாக அவரின் தயாரிப்பு நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருக்கும் ஸ்ரேயஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‛‛எனது பெயரிலோ அல்லது வுண்டர்பார் பிலிம்ஸ் பெயரிலோ வரும் எந்தவொரு நடிகர், நடிகைகளுக்கான அழைப்புகளும் முற்றிலும் போலியானவை மற்றும் ஆதாரமற்றவை என்பதை அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வருவதற்காக இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுமுகங்களை வைத்து நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் படத்தை தனுஷ் எடுத்துள்ளதால், அடுத்து நடிகர் தனுஷ் தயாரித்து இயக்க உள்ள படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.




