மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை |

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் பிரபலமான நாயகியாக மாறிவிட்டார். விக்கி கவுசல் உடன் இவர் நடித்துள்ள ‛சாவா' படம் இன்று(பிப்., 14) வெளியாகி உள்ளது. மராட்டிய மன்னர் சாம்பாஜி மகாராஜ் வாழ்க்கையை தழுவி சரித்திர படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணி ஏசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். பொதுவாகவே ராஷ்மிகாவிற்கு நேஷனல் கிரஷ் என்ற அடைமொழி உள்ளது. ஆனால் இந்த பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவாவது என்கிறார்.
இதுபற்றி ராஷ்மிகா கூறுகையில், ‛‛சினிமாவில் கிடைக்கும் பட்டங்கள், பெயர்கள் எல்லாம் வாழ்க்கையில் உதவுவதில்லை. அது ரசிகர்களின் அன்பினால் கிடைப்பது, அது வெறும் பெயர்கள் மட்டுமே. எனது ரசிகர்கள், நலம் விரும்பிகளை என் இதயத்திற்கு அருகில் வைத்துள்ளேன். அதை நம்பி படங்களில் நடிக்கிறேன். ரசிகர்களின் அன்பை எப்போதும் முதன்மையானதாக கருதுகிறேன். அவர்களுக்காக எதையும் செய்ய தயாராக உள்ளேன். தென்னிந்தியா, வட இந்தியாவில் நான் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது கடினமாக உள்ளது. அதேசமயம் அவர்களின் அன்புக்காக நான் எனது தூக்கத்திற்கு பாய் சொல்கிறேன்'' என்றார்.




