தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கில் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் வெளியான ‛தி கேர்ள் பிரண்ட்' திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக டாக்ஸிக் மனப்பான்மை கொண்ட ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி தன்னை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு படிப்பினையை தருவதாக இந்த படத்தின் கருத்து அமைந்துள்ளது பெண் ரசிகர்களிடம் அதிக பாராட்டை பெற்று வருகிறது. இந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகை ராஷ்மிகா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது கொரியன் திரைப்படங்களில் நடிப்பதற்கு, தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.
அவர் கூறும்போது, “கொரோனா காலகட்டத்தில் தான் கொரியன் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு கொரியன் வெப் சீரிஸும் கிட்டத்தட்ட 16 மணி நேரம் ஓடக்கூடிய மொத்தம் 16 எபிசோடுகள் அடங்கியதாக இருந்தது. அதனால் கொரியன் படங்களின் மீதான ஆர்வம் எனக்குள் இயல்பாகவே உள்ளே நுழைந்து விட்டது. அதேசமயம் கொரியன் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும் அதில் எனக்கு கொடுக்கப்படும் நல்ல கதாபாத்திரங்களை பொருத்து தான் அதை தேர்ந்தெடுப்பேன். நான் எவ்வளவு செலக்டிவாக கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்று உங்களுக்கே தெரியும் இல்லையா ?” என கூறியுள்ளார் ராஷ்மிகா.