'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
ஹிந்தியில் ‛ஆர்டிகிள் 370' படத்தில் நடித்தவர் நடிகை யாமி கவுதம். அடுத்ததாக ‛தூம் தாம்' எனும் நகைச்சுவை கலந்த காதல் படத்தில் நடித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 14ல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் யாமி கவுதமுக்கு ஜோடியாக நடிகர் பிரதீக் காந்தி நடிக்கிறார். படம் பற்றி யாமி கவுதம் அளித்த பேட்டியில், ‛‛தூம் தாம் ஒரு சூழ்நிலை சார்ந்த காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் கோயல். வீர் (பிரதீக் காந்தி) என்ற பையனுடன் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின்போது அன்று இரவில் அவர்களுக்கு சில சம்பவங்கள் நடக்கின்றன. அது பிரச்னையாக மாறும். இந்தப் பிரச்னைகளில் இருந்து கோயலும் வீரும் எப்படி வெளிவருகிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக காட்டியுள்ளோம்.
பிரதீக் உடன் பணிபுரிவது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு காட்சியில் நான் பிரதீக்கை துஷ்பிரயோகம் செய்ய வேண்டியிருந்தது. அந்த காட்சியில் நடிப்பதற்கு எனக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. பிரதீக் தான் காட்சியை விளக்கியதுடன் அதில் நடிக்க நிறைய உதவினார். நான் சில படங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன். எந்தப் படங்களில் நடிக்க வேண்டும், எந்தப் படங்களில் நடிக்கக்கூடாது என்று முடிவு செய்யும் நிலைக்கு இப்போது வந்துவிட்டேன். ஒரு காலத்தில் எனக்கு வேலை அதிகம் இல்லாததால் என்ன படம் கிடைத்தாலும் நடித்து வந்தேன். ஆனால் இப்போது மிகவும் கவனமாக யோசித்துதான் படங்களில் கையெழுத்திடுவேன்.
எனது கணவர் ஆதித்யா, மிகவும் கடின உழைப்பாளி மற்றும் திறமையான நபர். நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்து வருகிறோம், எனவே நாங்கள் ஒருவருக்கொருவர் வேலையைப் புரிந்துகொண்டு நிறைய ஆதரவளிக்கிறோம். நான் அவருடன் ‛உரி' படத்தை இயக்கியிருந்தேன், அப்போது எங்கள் உறவு ஒரு நடிகரும் இயக்குனருமாக மட்டுமே இருந்தது. ஆதித்யாவின் சிறப்பு என்னவென்றால், எந்த நடிகரிடம் இருந்தும் எப்படி நடிப்பை வரவழைப்பது என்பது அவருக்கு தெரியும்'' எனக் கூறினார்.