தயாரிப்பாளர் ஆன ரவி மோகன் : புதிய தயாரிப்பு நிறுவனம் துவக்கம் | சூப்பர் ஹீரோ படத்திற்காக லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்க்கும் அமீர்கான் | 50 கோடி சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ் ? | மம்முட்டி இன்னும் மாறவே இல்லை : சிம்ரன் வியப்பு | பாலியல் வழக்குகள் மொத்தமாக முடித்து வைப்பு : பார்வதியின் கருத்துக்கு பெண் இயக்குனர் பதிலடி | தீ Vs சின்மயி - கடைசியில் இல்லாமல் போன 'முத்த மழை' | 'வாடிவாசல்' டிராப் ஆகிறதா? : மீண்டும் பரவும் தகவல் | புதிய காட்சிகளுடன், நாளை 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | டாக்டராக நடிக்கும் டாக்டர் | தக் லைப் பர்ஸ்ட் ஷோ : படக்குழுவினர் புறக்கணிப்பா? |
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'சையாரா'. பாலிவுட் நடிகர் அஹான் பாண்டே நடித்துள்ளார், மேலும் அனீத் பட்டா கதாநாயகியாக நடிக்கிறார். வருகின்ற ஜூலை 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தற்போது இப்படத்திலிருந்து 'சையாரா' என்ற தலைப்புப் பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்துள்ளதாக இயக்குனர் மோஹித் சூரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: இந்த இசை ஆல்பத்தில் உள்ள பாடல்கள் 'எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள்' 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுக்கப்பட்டவை. என்னைப் பற்றி ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், புதிய இசையமைப்பாளர்கள், பாடகர்களைச் சந்திப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் புத்தகங்களை படிக்கவும், புத்தகங்களை சேகரிக்கவும் விரும்புபவர்களைப் போலவே மெல்லிசைகளையும் பாடல்களையும் சேகரிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.
எனவே, சையாராவின் ஆல்பத்தில் எனது பாடல்கள், எண்ணங்கள் மற்றும் மெல்லிசைகள் உள்ளது. அவற்றை நான் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாக சேகரித்து தொகுத்து வருகிறேன். சையாராவிற்காக அழகான, ஆத்மார்த்தமான மெல்லிசைகளுடன் கூடிய மிகவும் புதிய ஆல்பத்தை பார்வையாளர்களுக்கு வழங்க விரும்புகிறேன்.
அறிமுக நடிகர்களின் படத்திற்காக நான் புதிய காதல் ஆல்பத்தை தர விரும்புகிறேன். சையாராவின் இசை ஆல்பம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. எனவே, இந்த ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உணர்கிறது. சையாராவின் தலைப்புப் பாடலை முதலில் வெளியிட்டு எங்கள் மார்க்கெட்டிங் விளம்பரத்தை தொடங்குகிறோம்.
சையாராவின் தலைப்புப் பாடல் மூலம் காஷ்மீரில் இருந்து பாலிவுட் வரை மிகவும் திறமையான இந்திய இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களான பஹீம் அப்துல்லா மற்றும் அர்சலான் நிஜாமி ஆகியோரை அறிமுகப்படுத்துகிறோம். இந்த பாடலை தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். அழகான பாடல் வரிகளை மேஸ்ட்ரோ இர்ஷாத் கமில் எழுதியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.