பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தர்மா புரடக்ஷன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஹோம் பவுண்டு என்கிற படத்தை தயாரித்தார் கரண் ஜோகர். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு முதன்முறையாக வெளியானது. இந்த நிலையில் அந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதிக் ஷா என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்தன. தற்போது அது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தர்மாக புரொடக்ஷன் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது ; “தர்மா புரடக்ஷன்ஸ் எப்போதுமே தவறான நடவடிக்கைகளுக்கும், அத்துமீறல்களுக்கும், குறிப்பாக பாலியல் துன்புறுத்தல்களுக்கும் எதிரான நிறுவனம். அதிலும் பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகளை நாங்கள் ரொம்பவே சீரியஸாக கருதுகிறோம். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதிக்ஷா என்பவர் எங்களது படத்தில் ப்ரீ லான்சராகத்தான், அதுவும் கொஞ்ச காலத்திற்கே பணியாற்றினார். அந்த சமயத்தில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் படக்குழுவினர் சார்பில் இருந்து வரவில்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




