‛பறந்து போ' கிரேஸ் ஆண்டனிக்கு திருமணம் : 9 வருட காதலரை மணந்தார் | பிளாஷ்பேக் : 33 முறை மோதிய விஜயகாந்த், பிரபு படங்கள் | பிளாஷ்பேக்: முத்துராமலிங்கத் தேவர் பார்த்த ஒரே படம் | இன்று ரவிமோகன் பிறந்த நாள்: சிறப்பு போஸ்டர்கள் வெளியிட்டு வாழ்த்து | மடோனா, இவ்வளவு அழகாகப் பாடுவாரா ? | திருமணம் எப்போது? அதர்வா நச் பதில் | அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் : பிஸியாகும் நேரு ஸ்டேடியம் | கதை தயாராகாமல் அறிவிக்கப்பட்டதா விக்ரம் 64 ? | சென்ற வருடம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்', இந்த வருடம் 'லோகா' | சமூக ஊடகத்தில் கமெண்ட் என்ற பெயரில் மனநோயாளிகள் தாக்குகிறார்கள் : தங்கர்பச்சான் |
90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை சிம்ரன். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர், தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் எடுத்த மூன்று படங்களும் வெற்றியை பெற்றதுடன் சிம்ரனின் நடிப்புக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சிம்ரனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் சிம்ரன் தனது திரை பயணம் ஆரம்பித்தது குறித்து கூறும்போது, “தமிழில் நான் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக மலையாளத்தில் தான் அறிமுகமானேன். மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்கிற படத்தில் நடித்தேன். மலையாளத்தில் நான் நடித்த ஒரே படமும் அதுதான். இங்கே தமிழில் டெல்லி தர்பார் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நடித்தது மறக்க முடியாதது. சமீபத்தில் கூட அவருடைய பஷுக்கா திரைப்படம் பார்த்தேன். இன்று வரை அவர் மாறவே இல்லை. என்னுடைய தம்பி சுமித்தும் இந்த படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியை பொறுத்தவரை அவர் ஒரு ஐகானிக் நடிகர். ரஜினி சாரை போல அவரும் எங்களைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.