ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
90களின் மத்தியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தியவர் நடிகை சிம்ரன். அதன்பிறகு திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானவர், தற்போது மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை துவங்கியுள்ளார். அந்த வகையில் அவர் சமீபத்தில் எடுத்த மூன்று படங்களும் வெற்றியை பெற்றதுடன் சிம்ரனின் நடிப்புக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது. குறிப்பாக டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் சிம்ரனுக்கு ஒரு கம்பேக் படமாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் சிம்ரன் தனது திரை பயணம் ஆரம்பித்தது குறித்து கூறும்போது, “தமிழில் நான் படங்களில் அறிமுகமாவதற்கு முன்பாக மலையாளத்தில் தான் அறிமுகமானேன். மம்முட்டியுடன் இந்திர பிரஸ்தம் என்கிற படத்தில் நடித்தேன். மலையாளத்தில் நான் நடித்த ஒரே படமும் அதுதான். இங்கே தமிழில் டெல்லி தர்பார் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் நடித்தது மறக்க முடியாதது. சமீபத்தில் கூட அவருடைய பஷுக்கா திரைப்படம் பார்த்தேன். இன்று வரை அவர் மாறவே இல்லை. என்னுடைய தம்பி சுமித்தும் இந்த படத்தில் நடித்திருந்தார். மம்முட்டியை பொறுத்தவரை அவர் ஒரு ஐகானிக் நடிகர். ரஜினி சாரை போல அவரும் எங்களைப் போன்ற மற்ற மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார்” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி உள்ளார்.