பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழில் அவள் பெயர் தமிழரசி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை மனோ சித்ரா. அதன் பிறகு நீர் பறவை, வீரம் மற்றும் தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் பெரிதாக சினிமாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்மறையாக அமைந்தது.
தற்போது மனோ சித்ரா அளித்த பேட்டி ஒன்றில் அவரின் சினிமா பயணத்தில் ஏற்பட்ட தொய்வு குறித்து பேசியதாவது, "வீரம் படத்தின் கதையை என்னிடம் கூறியபோது தமன்னா பாதியில் இறந்துவிடுவார். அதன் பின் நீங்கள் தான் அஜித்திற்கு ஜோடி என்றனர். அதன்பிறகு தான் தெரியும் அது பொய் என்று. ஆனாலும் அஜித் சாருக்காக தான் நான் நடித்தேன். இதனால் எனது சினிமா வாழ்க்கை பாதிப்படைந்தது" என தெரிவித்துள்ளார்.