இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
பாலிவுட்டையும் தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாகவே வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த வருடம் அவரது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் இதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி சமீபத்தில் தான் இந்த சீசனும் முடிவு பெற்றது. அதேபோலத்தான் கன்னடத்திலும் கடந்த 11 வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனாலும் சினிமாவில் தான் இன்னும் தீவிர கவனம் செலுத்தப் போவதாக இந்த 11வது சீசன் துவங்கும்போதே கூறியிருந்த கிச்சா சுதீப், இந்த சீசனுடன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியிலேயே தான் விடை பெறுவதாக ரசிகர்களிடம் அறிவித்தார் கிச்சா சுதீப். இதைத்தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.