32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
பாலிவுட்டையும் தாண்டி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த பல வருடங்களாகவே வரவேற்புடன் நடைபெற்று வருகிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் இந்த வருடம் அவரது பிசியான ஷெட்யூல் காரணமாக அவர் இதிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகர் விஜய்சேதுபதி இந்த நிகழ்ச்சியை திறம்பட தொகுத்து வழங்கி சமீபத்தில் தான் இந்த சீசனும் முடிவு பெற்றது. அதேபோலத்தான் கன்னடத்திலும் கடந்த 11 வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வந்தார் நடிகர் கிச்சா சுதீப்.
இந்த நிகழ்ச்சியை அவர் கையாளும் விதத்திற்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. ஆனாலும் சினிமாவில் தான் இன்னும் தீவிர கவனம் செலுத்தப் போவதாக இந்த 11வது சீசன் துவங்கும்போதே கூறியிருந்த கிச்சா சுதீப், இந்த சீசனுடன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விடை பெறுவதாக அறிவித்து இருந்தார். அந்த வகையில் சமீபத்தில் கன்னட பிக்பாஸ் சீசன் 11 நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியிலேயே தான் விடை பெறுவதாக ரசிகர்களிடம் அறிவித்தார் கிச்சா சுதீப். இதைத்தொடர்ந்து அடுத்து யார் இந்த நிகழ்ச்சியை நடத்தப் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.