பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா |
திருச்சிற்றம்பலம், காதலிக்க நேரமில்லை படங்களைத் தொடர்ந்து தற்போது இட்லி கடை, தலைவன் தலைவி போன்ற படங்களில் நடித்துள்ளார் நித்யா மேனன். இவர் அளித்த ஒரு பேட்டியில், ரசிகர்களின் செயல்பாடு குறித்து தனது அதிருப்தி மனநிலையை வெளிப்படுத்தி உள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் அங்கு எங்களை பார்க்க கூடும் ரசிகர்கள் கை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், ஒட்டி உரசியபடி நின்று செல்பி எடுக்கிறார்கள். விலகி நின்றாலும் கூட அவர்கள் நெருங்கியே வருகிறார்கள். நடிகைகள் என்றால் எதையும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் அப்படி இவர்கள் எளிதாக எங்களை தொடுவதற்கு நாங்கள் என்ன பொம்மைகளா? என்று கேள்வி எழுப்பி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார் நித்யா மேனன்.