பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் |
வீர தீர சூரன் படத்தை அடுத்து லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார்-2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்த நிலையில், தெலுங்கில் 2024ம் ஆண்டு நானி நாயகனாக நடித்த சரிபோதா சனிவாரம் என்ற படத்தில் வில்லனாக நடித்திருத்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆக்ஷன், திரில்லர் கதையில் உருவான இந்த படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடித்தார். இதில் வில்லனாக நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு தெலுங்கானா அரசு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கியுள்ளது. இதையடுத்து அவருக்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வாழ்த்து செய்தி பதிவிட்டு இருந்தார்.
அதில் , வாழ்த்துக்கள் சார் இந்த படத்தில் நீங்கள் சிறந்த துணை நடிகர் மட்டுமல்ல, எல்லாமே நீங்கள்தான். இந்த விருதை பெறுவதற்கு முழு தகுதி பெற்றவர் என்று ஒரு பதிவு போட்டார். ஆனால் அதற்கு எஸ்.ஜே.சூர்யா, மிக்க நன்றி நானி சார் என்று ஒரு பதில் கொடுத்தார்.
அந்த பதிவு முழுமையாக இல்லை என்று சொல்லி மீண்டும் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார் எஸ்.ஜே சூர்யா. அதில், மன்னிக்கவும் நானி சார். படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் உங்களது பாராட்டு செய்திக்கு என்னால் உரிய பதிலை அளிக்க இயலவில்லை. காரணம் நன்றி என சொல்வது மட்டும் போதாது. நீங்களும், இயக்குனர் விவேக்கும் எனக்கு முழு ஆதரவாக இருந்தீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த பயணம் சாத்தியமில்லை. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக இருக்கிறீர்கள் என்று ஒரு பதிவு போட்டுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.