நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராஸி மற்றும் சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில், மதராஸி படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது, சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க முருகதாஸ் சென்று விட்டதால், அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தபோதே, சுதா கெங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் நடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் தற்போது பராசக்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் அமலாக்கத்துறை விசாரணையில் சிக்கி இருப்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், மதராஸி படத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் சிவகார்த்திகேயன். அப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது. அடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பை தொடங்கப் போகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மதராஸி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் .