இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
தமிழில் 'திமிரு, மரியான்' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபலமானவர் மலையாள நடிகர் விநாயகன். ஆனாலும் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் இவரை தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை பேச வைத்து விட்டது. அதேசமயம் இப்படி படங்களில் கிடைக்கும் புகழை விட இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதன் மூலம் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகளுடன் தகராறு செய்தார். பின்னர் கடந்த வருடம் கேரளாவில் போலீஸ் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்து கைது செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட கோவாவில் ஒரு டீக்கடைக்காரரிடம் தகராறு செய்தது வைரலாக பரவியது.
இந்த நிலையில் தற்போது தனது வீட்டு பால்கனியில் நின்றபடி பச்சை நிற வேட்டி அணிந்து எதிர் வீட்டுக்காரர் ஒருவரை அநாகரிக வார்த்தைகளால் அர்ச்சித்து விநாயகன் பேசிய வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதில் அவர் திடீரென வேட்டியை அவிழ்த்து காட்டியது, பால்கனியில் நிலை தடுமாறி உள்பக்க தரையில் விழுந்தது என அவர் மது போதையில் இருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த வீடியோ குறித்து ரசிகர்கள் பலரும் கூறும்போது, நல்ல திறமையான நடிகர் இப்படி தேவையில்லாமல் சர்ச்சைகளில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறாரே என தங்களது வருத்தத்தை கமெண்ட்டுகளாக வெளிப்படுத்தி வருகின்றனர்.