ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'கல்கி 2898 ஏடி'. இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி சுமார் 1200 கோடி வசூலித்தது. இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான திரைக்கதை எழுதும் வேலைகளை படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டாராம்.
ஜுன் மாதம் முதல் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக தயாரிப்பாளர் அஷ்வினி தத் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அதற்காக பிரபாஸ் ஏற்கெனவே தேதிகளைக் கொடுத்துவிட்டாராம். அமிதாப், கமல் உள்ளிட்டவர்களிடமும் தேதிகளைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இரண்டாம் பாகத்தை 2027ம் ஆண்டுதான் வெளியிட உள்ளார்களாம். முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் விஎப்எக்ஸ் வேலைகள் அதிகம் இருப்பதால் அதை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதே அதற்குக் காரணம்.