மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2. அதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டில் தில்லுக்கு துட்டு 3வது பாகம் 'டிடி ரிட்டர்ன்ஸ்' எனும் பெயரில் வெளியானது. அதனை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கினார்.
இதைத்தொடர்ந்து பிரேம் ஆனந்த் , சந்தானம் கூட்டணியில் 'டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகிறது. இதனை நடிகர் ஆர்யா மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மெண்ட் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட இறுதிகட்ட படப்பிடிப்பு நெருங்கிய நிலையில் சந்தானம் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் கவுதம் மேனன், செல்வராகவன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், மாறன் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.