பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது தமிழ் சினிமாவில் டிரெண்ட் ஆகி உள்ளது. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல நடிகர்களின் படங்கள் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகி வருகின்றன. அந்தவகையில் பரதன் இயக்கத்தில் 1992ல் வெளியான படம் ‛தேவர் மகன்'. கமலின் எவர்கிரீன் படங்களில் ஒன்றான இதில் சிவாஜி கணேசன், ரேவதி, கவுதமி, நாசர், வடிவேலு, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகள் நடக்கின்றன. இன்றைய டிஜிட்டல் தரத்தில் படத்தை மெருகேற்றி வருகின்றனர்.
அதற்காக இந்த படத்தில் சில காட்சிகளை கூடுதலாக சேர்த்து ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக இப்படத்தில் வரும் குழந்தைகள் கதாபாத்திரத்திற்கான வாய்ஸ் ஓவர்க்காக மதுரையை சேர்ந்த சிறுவர்கள் தேவ ஹர்சினி, முத்துமணி, கனிஷ்பா, வர்ஷிபா, சிவஸ்ரீ ஆகிய ஐவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை சென்னைக்கு அழைத்து சென்று நடிகர் கமல் முன்னிலையில் வாய்ஸ் ஓவர் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த சிறுவர்களை சந்தித்த கமல், அவர்களுடன் உரையாடினார். அதில் சுட்டி பையன் பேசிய கட்டபொம்மன் படத்தின் வசனத்தை கண்டு அசந்து போனார்.