ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த 'தம்மா' படம் தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தபடியாக நவம்பர் 14ம் தேதி தெலுங்கில் அவர் நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் திரைக்கு வரப்போகிறது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''காதல் தோல்வி ஏற்பட்டு காதலர்கள் பிரிந்தால் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் ஆண்களை பொறுத்தவரை தங்களது காதல் தோல்வியை வெளிப்படுத்த தாடி வளர்க்கிறார்கள். சரக்கு அடித்து காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள்.
அதேசமயம் பெண்களை பொறுத்தவரை தாடி வளர்க்க முடியாது. சரக்கு அடிக்க முடியாது. அதனால் மனதளவில் தங்களுக்குள்ளேயே மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். யாருக்கும் தெரியாமல் சோகத்தை தங்களுக்குள் மறைத்துக்கொள்கிறார்கள். காதல் தோல்வியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ஆண்கள் அளவுக்கு பெண்கள் காதல் பிரிவை நினைத்து கவலைப்படுவதில்லை என்று ஒரு கருத்து நிலவிக் கொண்டிருக்கிறது,'' என தெரிவித்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
மேலும், தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும், பிப்ரவரி மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.