தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சூரி, வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' படத்தின் மூலம் கதையின் நாயகனாக உருவெடுத்தார். இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய இப்படத்திற்கு பிறகு, கதையின் நாயகனாக அடுத்தடுத்து ஒப்பந்தமானார். சமீபத்தில் வெளியான 'விடுதலை 2' படத்திலும் இவரது கதாபாத்திரம் பேசப்பட்டது.
'விடுதலை 2' படம் வெளியாகி 25 நாட்கள் ஆன நிலையில் நடிகர் சூரி தனது 'எக்ஸ்' பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''விடுதலை 1, விடுதலை 2 ஆகிய திரைப்படங்கள் என் வாழ்க்கையில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய படங்களாக எப்போதும் இருக்கும். குமரேசனாக நடிப்பது என் வாழ்க்கையில் என்றென்றும் ஒரு சிறப்பு மற்றும் வரையறுக்கும் பாத்திரமாக இருக்கும்.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட எனது தொலைநோக்கு இயக்குனர் வெற்றிமாறன் சார், எனது தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் மற்றும் இந்த மறக்க முடியாத பயணத்தை சாத்தியமாக்கிய எனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பெரிய நன்றி. அனைத்து உதவியாளர் மற்றும் இணை இயக்குநர்களுக்கும் ஒரு சிறப்பு பாராட்டு. உங்கள் கடின உழைப்பு, வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல், இவ்வளவு சிறப்பு வாய்ந்த திட்டத்தில் நான் இந்த மைல்கல்லை எட்டியிருக்க மாட்டேன். உங்கள் உண்மையான அன்பு மற்றும் ஆதரவிற்காக அனைத்து ஊடகங்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்களுக்கும் என்றென்றும் நன்றி. நீங்கள் எனது மிகப்பெரிய பலம்,' எனப் பதிவிட்டுள்ளார்.




