பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் |
சமீப காலமாக பிரபல ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் முதல் நாள் அன்றோ அல்லது அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டங்களிலோ ரசிகர்கள் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழப்பது தொடர்கதை ஆகி வருகிறது. அப்படி சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க வந்த ஹைதராபாத்தை சேர்ந்த ரேவதி என்கிற குடும்பத் தலைவி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷங்கர்-ராம்சரண் கூட்டணியில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பிய இரண்டு ரசிகர்கள் வாகன விபத்தில் சிக்கி பலியான சம்பவம் மீண்டும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காக்கிநாடாவை சேர்ந்த மணிகண்டா மற்றும் தொக்கடா சரண் ஆகிய இருவரும் தான் இந்த விபத்தில் பலியானவர்கள். இதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ இந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் உதவி தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் இது குறித்து தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் இந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா 5 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார்.