யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
'புஷ்பா 2' படம் திரையிட்ட தியேட்டரில் ரேவதி என்ற பெண் உயிரிந்த வழக்கில் அல்லு அர்ஜூன் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் அளித்தது. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் காவல் நிலையம் சென்று விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. அதன்படி நேற்று சிக்கடப்பள்ளி காவல் நிலையத்தில் ஆஜரானார்.
இன்னொருபுறம் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுவன் தேஜ்ஜை பார்க்க அனுமதி கேட்டு போலீசில் அல்லு அர்ஜுன் மனு செய்திருந்தார். இதற்கு பதில் அளித்து போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:
'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்ரீ தேஜ்ஜை காண வந்தால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிர்வாகத்துக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். இருப்பினும் நீங்கள் செல்ல விரும்பினால் காவல் நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் முன்கூட்டியே தெரிவித்தால் வந்து செல்லும் வழித்தடத்தை ரகசியமாக வைத்து அனுப்ப ஏற்பாடு செய்யப்படும். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நீங்கள் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்' என நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அல்லு அர்ஜுன் சிறுவனை சந்திக்கும் திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.