இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவில் பல வித திறமைகளைக் கொண்ட நடிகர்களில் ஒருவர் சிலம்பரசன். நடிப்பது மட்டுமல்லாமல் இசையமைப்பது, பாடல் எழுதுவது, பாடுவது என பல விஷயங்களை அறிந்தவர். 18 வருடங்களுக்கு முன்பே 'வல்லவன்' படத்தையும் இயக்கிவிட்டார். ஆனால், வேறு சில நடிகர்களுக்குக் கிடைக்கும் சிறந்த வாய்ப்பும், பிரபலமும், விளம்பரமும் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'தக் லைப்' படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்புவின் 48வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த வருடம் பிப்ரவரி 3ம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதோடு படம் பற்றிய அடுத்த அப்டேட் எதுவும் வரவில்லை. அப்படத் தயாரிப்பிலிருந்து கமல் பின் வாங்கிவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி தான் அப்படத்தின் இயக்குனர். அதன்பின் புதிய தயாரிப்பாளரை சிம்புவும், தேசிங்குவும் சேர்ந்தே தேடி வருகிறார்களாம். சரித்திரக் கதை என்பதால் படத்தின் பட்ஜெட்டும் அதிகம். அதனால்தான் கமல் விலகியதாக ஒரு தகவல்.
இதனிடையே சிம்புவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தேசிங்கு பெரியசாமி நேற்று எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதை மறுபதிவு செய்து, “உண்மையில் மதிப்புள்ளதை நேரம் சோதிக்கிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் கிடைக்க தாமதமாவது குறித்துத்தான் சிம்பு அப்படி பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது.