துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
இசையமைப்பாளர் இளையராஜா பீக்கில் இருந்த காலகட்டத்தில் தான் தனது இசை பயணத்தை துவங்கினார் ஏ.ஆர் ரஹ்மான். முதல் படத்திலேயே அற்புதமான பாடல்களையும் வித்தியாசமான இசையையும் கொடுத்ததால் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. இளையராஜா பிசியாக இருந்தார் என்பதும் ஏ.ஆர் ரஹ்மானின் வளர்ச்சிக்கு இன்னொரு காரணமாக அமைந்தது. அதேசமயம் ஏ.ஆர் ரஹ்மான் சினிமாவில் இசையமைப்பதற்கு முன்பாக பல இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து அவர்களது குழு நடத்தும் நிகழ்ச்சிகளில் வாசித்துக் கொண்டிருந்தார். பெரும்பாலும் ஏற்கனவே ஹிட்டான சினிமா பாடல்களை அப்படியே இசையமைப்பது தான் ஏ.ஆர் ரஹ்மான் வழக்கமாக இருந்ததாம்.
அப்படி ஒருமுறை அவர் வாசித்தபோது ஒரு குழுவில் இருந்த ஒரு கிடாரிஸ்ட் போதையில் ஏ.ஆர் ரஹ்மானிடம் ஒரு நாள், எதற்கு ஏற்கனவே வந்த ஒன்றை காப்பி அடித்துக் கொண்டிருக்கிறாய். உனக்கென தனித்துவமான ஒன்றை உருவாக்க முயற்சி செய் என்று விமர்சனம் செய்துள்ளார். ஆனால் அந்த விமர்சனம் தான் தனக்கான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டியாக அமைந்தது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். அப்படி அந்த கிடாரிஸ்ட் கூறிய பிறகு இப்படி குழுக்களில் சேர்ந்து வாசிப்பதை நிறுத்திவிட்டு, சொந்தமாகவே புது வகையான இசையை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டேன் என்று கூறியுள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.