எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நடிகை திரிஷா படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், ஓய்வு நேரங்களில் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். செல்லப்பிராணிகளுடன் இருக்கும்படியான வீடியோக்கள், புகைப்படங்களை அதிகமாக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவருக்கு இவற்றின்மீது மிகப்பெரிய அளவில் பிரியம் காணப்படுகிறது. தெரு நாய்களை தத்தெடுக்க எப்போதும் தனது ரசிகர்களை அவர் ஊக்குவித்தும் வருகிறார்.
இதற்கிடையே ஜோரோ எனும் நாய் செல்லமாக வளர்த்து வந்தார். அவற்றுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளையும் அவ்வப்போது வெளியிட்டுள்ளார். இந்த நிலையில், இன்று (டிச.,25) அதிகாலையில் அந்நாய் திடீரென இறந்துள்ளது. இதனை வருத்தத்துடன் தெரிவித்துள்ள திரிஷா, 'எனது மகன் ஜோரோ, கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் உயிரிழந்தான். இனிமேல் என் வாழ்க்கை பூஜ்ஜியம் என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். நானும், எனது குடும்பமும் அதிர்ச்சியில் உடைந்துபோயுள்ளோம். சிறிதுகாலம் பணியில் இருந்து விலகியிருக்க உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.