லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

‛ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழ், தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்து வந்தார். தற்போது சினிமாவை விட்டே ஒதுங்கி துபாயில் செட்டிலாகிவிட்டார். அதேசமயம் கார் ரேஸில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் துபாய் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்வதாக அறிவித்தார். அவ்வப்போது வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வரும் இவர், இப்போது ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்தை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அபத்தமான ஏஐ வீடியோக்களை உண்மையானவையாக காட்டும் இந்தப்போக்கு மிகவும் மோசமானது. இப்போது அவை முற்றிலும் பிரித்தறிய முடியாததாக மாறும்போது அது எவ்வளவு மோசமாகிவிடும் என்று கற்பனை செய்து பாருங்கள்'' என குறிப்பிட்டுள்ளார்.