புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 |
இயக்குனர் ஷங்கர் தமிழில் பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர். தற்போது தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜன., 10ல் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் பல உச்ச நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது கேம் சேஞ்சர் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக கனவு கண்டேன். ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. அதேபோல் கொரோனா காலகட்டத்தில் பிரபாஸிடம் ஒரு கதை ஒன்று கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை" என தெரிவித்துள்ளார்.