ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
இயக்குனர் ஷங்கர் தமிழில் பல பிரமாண்டமான படங்களை இயக்கியவர். தற்போது தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' படத்தை இயக்கியுள்ளார். ராம் சரண், கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். ஜன., 10ல் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
ஒரு காலகட்டத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க தென்னிந்தியாவில் பல உச்ச நடிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இப்போது கேம் சேஞ்சர் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷங்கர் கூறியதாவது, "தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் ஆன சிரஞ்சீவியை வைத்து படம் இயக்குவதற்காக கடந்த 15 வருடங்களாக கனவு கண்டேன். ஆனால் அது இதுவரை சாத்தியமாகவில்லை. அதேபோல் கொரோனா காலகட்டத்தில் பிரபாஸிடம் ஒரு கதை ஒன்று கூறினேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் நிறைவேறவில்லை" என தெரிவித்துள்ளார்.