மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் |

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் தற்போது 1400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் 'பிரேக் ஈவன்' ஆனது. தற்போதுதான் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வியாபாரம் ஒட்டுமொத்தமாக சுமார் 600 கோடி ரூபாய்க்கு நடந்தது. அவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டுமென்றால் ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். அந்த வசூல் சில தினங்களுக்கு முன்புதான் கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அங்கு தற்போதுதான் அந்த அசல் தொகை வசூலை அடைந்துள்ளதாம். அடுத்து வரும் வசூல்தான் அங்கு லாபக் கணக்கில் சேரும். அதேசமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த வாரத்திலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.
படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் லாபம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, இசை உரிமை இதர உரிமைகள் என அதில் மட்டுமே குறைந்த பட்சம் 300 கோடி வரை கிடைத்திருக்கலாம் என்பது தகவல். தியேட்டர் வசூல் மூலமும் பல கோடிகள் கிடைக்கும்.




