லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. இப்படம் தற்போது 1400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இருந்தாலும் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இப்படம் 'பிரேக் ஈவன்' ஆனது. தற்போதுதான் லாபக் கணக்கை ஆரம்பித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தின் வியாபாரம் ஒட்டுமொத்தமாக சுமார் 600 கோடி ரூபாய்க்கு நடந்தது. அவ்வளவு தொகையை வசூலிக்க வேண்டுமென்றால் ஏறக்குறைய இரண்டு மடங்கு அளவுக்காவது வசூல் கிடைக்க வேண்டும். அந்த வசூல் சில தினங்களுக்கு முன்புதான் கிடைத்தது.
இப்படம் தெலுங்கில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆனது. அங்கு தற்போதுதான் அந்த அசல் தொகை வசூலை அடைந்துள்ளதாம். அடுத்து வரும் வசூல்தான் அங்கு லாபக் கணக்கில் சேரும். அதேசமயம் மற்ற மாநிலங்களில் இப்படம் கடந்த வாரத்திலேயே லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.
படத்தைப் பொறுத்தவரையில் தயாரிப்பாளருக்கு மிகப் பெரும் லாபம். ஓடிடி, சாட்டிலைட் டிவி உரிமை, இசை உரிமை இதர உரிமைகள் என அதில் மட்டுமே குறைந்த பட்சம் 300 கோடி வரை கிடைத்திருக்கலாம் என்பது தகவல். தியேட்டர் வசூல் மூலமும் பல கோடிகள் கிடைக்கும்.