Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நான் கதாநாயகியான தருணம்: ராஷ்மிகா பதிவு

19 டிச, 2024 - 01:38 IST
எழுத்தின் அளவு:
Rashmika-Mandanna-embraces-her-heroine-moment


நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா 2' படம் மிகப்பெரிய அளவில் வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது. அவர் கைவசம், 'குபேரா, கேர்ள்பிரண்ட், சாவா, ரெயின்போ, சிக்கந்தர்' ஆகிய படங்கள் உள்ளன. இதில் குபேரா, கேர்ள்பிரண்ட் இறுதிக்கட்டத்தில் இருக்கின்றன. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ராஷ்மிகா, இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை 'நான் கதாநாயகியான தருணம்' என்ற பெயரில் வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், 'முந்தைய காலங்களில் நான் மாடல்களையும் நடிகர் நடிகைகளையும் பார்த்து மயங்கிப்போயிருக்கிறேன். நானும் தற்போது அந்த நிலைமையை அடைந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால், இதில் முக்கியமானது நமது கடின உழைப்பும் நம்மை அந்தமாதிரி காட்டும் ஆட்களுடன் வேலைசெய்வதும்தான். நிச்சயமாக இதில் எடிட்டிங்கும் பங்கு இருக்கிறது. கேமரா லென்ஸ்க்கு பின்புறம் திறமையான ஆட்கள் வேலை செய்கிறார்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன்-3' தியேட்டரில் தான் வெளியாகும்: உறுதிப்படுத்திய ஷங்கர்'இந்தியன்-3' தியேட்டரில் தான் ... விஜய்யும் தயங்கினார்.. ஷாருக்கும் நம்பவில்லை ; மனம் திறந்த அட்லி விஜய்யும் தயங்கினார்.. ஷாருக்கும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vijay - coimbatore,இந்தியா
20 டிச, 2024 - 09:12 Report Abuse
vijay //...நான் கதாநாயகியான தருணம்..// ரசிகர்கள் என்னும் இளைஞர்கள் வாழ்க்கை நாசமாக மாறிய தருணம்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)