பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானாவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள 'தம்மா' என்ற படம் அக்டோபர் 21ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. திகில் நகைச்சுவை கலந்த கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் காட்டேரி வேடத்தில் ராஷ்மிகா நடித்திருக்கிறார். இந்த படத்திற்கான புரமோஷனில் கடந்த ஒரு மாதமாக ஈடுபட்டு வந்தார் ராஷ்மிகா.
இந்த நிலையில் அடுத்தபடியாக ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நவம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரப்போகும் படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்'. தெலுங்கில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அடுத்து பங்கேற்க போகிறார் ராஷ்மிகா. இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டு ஹிந்தி படங்களும், ஒரு தெலுங்கு படமும் அவரது நடிப்பில் வெளியான நிலையில், தி கேர்ள் ப்ரெண்ட் 2025ம் ஆண்டில் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பில் வெளியாகும் இறுதி படமாக இருக்கப் போகிறது.