துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஐந்தாம் தேதி திரைக்கு வந்த படம் புஷ்பா 2. இந்த படத்தின் முதல் நாள் காட்சியை பார்க்க வந்த ரேவதி என்ற பெண் தியேட்டரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் கைது செய்தார்கள். ஒரு நாள் சிறையில் இருந்து விட்டு மறுநாள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார். அதையடுத்து தனது வீட்டுக்கு அல்லு அர்ஜுன் சென்றபோது வீட்டு வாசலில் அவரது மனைவி அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டார்.
இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் சமந்தா. அதோடு அந்த வீடியோவை வெளியிட்டிருந்த அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா ரெட்டி, நான் அழவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் சமந்தாவோ, அந்த வீடியோவுக்கு ஆனந்த கண்ணீர் வடிக்கும் எமோஜிகளை இணைத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.