எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 45 ஆவது படத்தில் திரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ் மற்றும் மலையாள நடிகை சுவாசிகாவும் இணைந்து இருக்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா 45 வது படத்தை தயாரிக்கும் ட்ரீம்ஸ் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறது. இவர்களில் இந்திரன்ஸ் தமிழில் இதற்கு முன்பு ஆடும் கூத்து, நண்பன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அதேபோல் சுவாசிகா ஏற்கனவே கோரிப்பாளையம் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினியாக நடித்தவர், சமீபத்தில் திரைக்கு வந்த லப்பர் பந்து என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.