டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இப்போதெல்லாம் பக்கா கமர்ஷியல் படத்தில் பாலிவுட் நடிகர்கள் வில்லனாக நடிப்பது டிரண்டாகி உள்ளது. சஞ்சய் தத், பாபி தியோல் போன்றவர்கள் இப்போதும் நடித்து வருகிறார்கள். ஆனால் 1980களிலேயே இந்த டிரண்ட் தொடங்கி விட்டது. ஜெய்சங்கர், ராதிகா நடித்த பக்கா கமர்ஷியல் படம் 'கன்னித்தீவு'. சயின்ஸ் பிக்ஷனையும், விட்டலாச்சார்யா கதையையும் கலந்து சிறிதும் லாஜிக் இல்லாத ஒரு மேஜிக்கான படத்தை இயக்கினர் டி.ஆர்.ராமண்ணா.
ஜெய்சங்கர், ராதிகாவுடன் சீமா, சி.எல்.ஆனந்தன், ஐசரி வேலன், என்னத்த கண்ணையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தனியான ஒரு மர்ம தீவில் அந்த தீவுக்கு வருகிற புதியவர்களுக்கு ஏற்படுகிற திகிலூட்டும் அனுபவம்தான் படம். இந்த படத்தில் காளி என்கிற கொடூர வில்லனாக நடித்தார் அப்போது பாலிவுட்டில் முன்னணி ஹீரோவாக இருந்த ரஞ்சித். எம்.பி.ஷெட்டி என்ற கன்னட நடிகரும் நடித்திருந்தார்.
புதுமையான தந்திர காட்சிகள், திகிலூட்டும் காட்சிகள், சீமாவின் கவர்ச்சியான நடிப்பு, பயங்கர சண்டை காட்சிகள் இவற்றால் படம் நல்ல வசூலை கொடுத்தபோதும் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. அதிலும் குறிப்பாக 'பாலிவுட் நடிகர் ரஞ்சித்துக்கு இதெல்லாம் தேவையா' என்கிற அளவிற்கு விமர்சனங்கள் வந்தது. இதனால் இந்த ஒரு படத்துடன் மீண்டும் பாலிவுட்டுக்கே திரும்பி விட்டார் ரஞ்சித்.




