32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
சென்னையை சேர்ந்த அக்குபஞ்சர் வைத்தியர் சீனிவாசன். சினிமா மீதுள்ள ஆசையால் திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்தார். பின்னர் 'லத்திகா' என்ற படத்தை தானே தயாரித்து நடித்தார். இந்த படத்தை பார்க்க வருகிறவர்களுக்கு பிரியாணியும், 100 ரூபாயும் கொடுத்து ஒரு தியேட்டரில் 100 நாள் ஓட வைத்தார். பின்னர் சந்தானம் நடித்த 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்.
பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்த அவர் அவ்வப்போது மோசடி வழக்குகளில் சிறை சென்று வந்தார். தற்போது 'கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து வருகிறார். இந்த நிலையில் சீனிவாசன் நேற்று சென்னை கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்பட்டதன் காரணமாகவே அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஒரு வாரம் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.