லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
வெள்ளை ஆடை, கைகட்டி நிற்கும் பணிவு, அதிர்ந்து பேசாத குரல் இதுதான் ஏவிஎம்.சரவணன். 100 படங்களுக்கு மேல் தயாரித்தும் எந்த ஆர்ப்பாட்டமோ, அகங்காரமோ இல்லாத அமைதி கடல். ஏவி.மெய்யப்ப செய்டியார் மறைந்தபோது இத்தனை பெரிய நிறுவனத்தை யார் கட்டி காப்பது என்ற கேள்வி எழுந்தபோது கம்பீரமாக அந்த நாற்காலியில் உட்கார்ந்தவர்.
அன்றைக்கு ஏவிம்மை விட்டு விலகி இருந்த மக்கள் திலகம் எம்ஜிஆரை நிறுவனத்திற்குள் கொண்டு வந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அர்ஜுன், கே.பாக்யராஜ் என அடுத்த தலைமுறை ஹீரோக்களையும் கொண்டு வந்தவர். ஓப்பனிங் சாங், ஹீரோ என்ட்ரி, இன்டர்வல் பிளாக், மூணு ரீலுக்கு ஒரு பாடல், ஒரு சண்டை, பரபரப்பான கிளைமாக்ஸ் என கமர்சியல் சினிமாவை வடிவமைத்தவர்.
ஏவிஎம் நிறுவனத்தை காலத்திற்கேற்ப மாற்றி அமைத்தவர். அன்றைய தேதியில் பெரிய பட்ஜெட் படமாக 'சிவாஜி'யை உருவாக்கினார். ரஜினி, ஷங்கர் என்ற இரு பெரும் ஜாம்பவான்களை இணைத்து சாதனை படைத்தார். தற்போது சினிமா தயாரிக்கவில்லை என்றாலும் ஏவிஎம் நிறுவனத்தின் சில பகுதிகளை அவரது சகோதரர்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தினாலும், தனது கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை இப்போதும் சினிமாவிற்காக கொடுத்து வருகிறவர். ஓடிடி வெப் தொடர்கள், தொலைக்காட்சி தொடர்கள், ஆல்பங்கள் என காலத்துக்கேற்ற மாற்றத்தை கொண்டு வந்தவர்.
இன்று அவருக்கு 84வது பிறந்த நாள். சற்று உடல்நலக்குறைவுடன் இருக்கும் அவர் மீண்டும் ஏவிஎம் வளாகத்திற்குள் ராஜநடை போட வாழ்த்துவோம்.