ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன். ‛சகாப்தம், மதுரை வீரன்' போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய அன்பு இயக்கி வருகிறார். இப்படத்தில் சண்முக பாண்டியனுடன் எம்.எஸ். பாஸ்கர், யாமினி சந்தர், கஸ்தூரிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
காட்டுப் பகுதியில் நடக்கும் கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஒரு யானை உடன் இணைந்து நடித்திருக்கிறார் சண்முக பாண்டியன். இந்த நிலையில் தற்போது இந்த படைத்தலைவன் படத்தின் முதல் பாடலாக ‛உன் முகத்தைப் பார்க்கலையே' என்ற ஒரு பாடலை வெளியிட்டுள்ளார்கள். இளையராஜா எழுதியுள்ள இந்த பாடலை, அனன்யா பட் பாடியுள்ளார்.