ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா 2' படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் சென்னை புரமோஷன் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆனால், பின்னணி இசையை அவர் அமைக்கவில்லை. அவருக்குப் பதிலாக வேறு சில இசையமைப்பாளர்கள் அமைத்துள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், இதுவரையில் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதனிடையே, நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளியான சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
“ரவி சார், நான் சரியான நேரத்தில் பாடல்களைத் தரவில்லை, பின்னணி இசையைத் தரவில்லை என என் மீது குற்றம் சுமத்தினீர்கள். நீங்கள் என் மீது அன்பு செலுத்துபவர். எங்கு அன்பு உள்ளதோ அங்கு குற்றச்சாட்டுக்களும் இருக்கும். ஆனால், என் மீதான அன்பை விட உங்கள் குற்றச்சாட்டுக்கள்தான் அதிகமாக உள்ளது. “தவறான நேரம், நான் லேட்' என நீங்கள் கூறுகிறீர்கள். நான் என்ன செய்ய முடியும். இப்போது கூட 25 நிமிடங்களுக்கு முன்பே வந்துவிட்டேன். ஆனால், குறிப்பிட்ட சமயத்தில்தான் நான் கேமரா என்ட்ரி தர வேண்டும் என என்னை அனுமதிக்கவில்லை.
மேடை மீது இவற்றை டிஸ்கஸ் செய்யத் தேவையில்லை. நான் மேடையில் பேசினால் அது என்னைத்தான் தாக்கும். இருந்தாலும் நான் ஓபனாக இருக்க விரும்புகிறேன்,” என வெளிப்படையாகப் பேசினார்.
புஷ்பா 2 பின்னணி இசை சர்ச்சையால் தேவி ஸ்ரீ பிரசாத் மனதளவில் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் நேற்று அவர் மேடையில் வெளிப்படையாகப் பேசியிருப்பதும் இப்போது சர்ச்சையாகி உள்ளது.