இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இயக்குனர் சிவாவின் தம்பியும் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்தவருமான நடிகர் பாலா, மலையாள திரை உலகில் தான் அதிக கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் கடந்த 2008ல் இருந்து கிட்டத்தட்ட மூன்று திருமணங்கள் செய்து பின்னர் அவர்களிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து ஒவ்வொரு முறையும் பரபரப்பு செய்திகளில் அடிபட்டார். இந்த நிலையில் சமீபத்தில் சென்னையை சேர்ந்த தனது உறவு பெண்ணான கோகிலா என்பவரை நான்காவதாக திருமணம் செய்து கொண்டார். இது இன்னும் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்த நிலையில் பல வருடங்களாக கொச்சியில் வசித்து வரும் பாலா அடுத்ததாக அதை விட்டு தூரமாக ஒரு இடத்திற்கு சென்று வசிக்கப் போவதாக தனது ரசிகர்களிடம் சோசியல் மீடியா மூலமாக கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என்னைப் போலவே எனது மனைவி கோகிலாவுக்கும் உங்கள் ஆதரவு வேண்டும். நீண்ட நாட்களாக நான் வாழ்ந்து வந்த கொச்சியை விட்டு வேறு இடம் நோக்கி செல்கிறேன். எனது குடும்பத்திற்காக, எனது உடல்நிலைக்காக நான் அமைதியான வாழ்க்கை வாழ வேண்டி இருக்கிறது. என்னை எப்போதுமே ஆதரித்து வந்தவர்கள் என் ரசிகர்களாகிய நீங்கள்.. உங்களிடம் சொல்லாமல் நான் கிளம்ப முடியுமா? விரைவில் இடம் மாறுகிறேன்” என்று கூறியுள்ளார். ஆனால் வேறு எந்த இடத்துக்கு போகிறேன் என பாலா கூறவில்லை.