Advertisement

சிறப்புச்செய்திகள்

கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி

16 ஜூலை, 2025 - 05:45 IST
எழுத்தின் அளவு:
“My-life-is-in-danger...”-Actor-Balas-3rd-wife-admitted-to-hospital

தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பாலா. இவர் இயக்குனர் சிவாவின் உடன் பிறந்த சகோதரர். அதேசமயம் மலையாள திரையுலகில் செட்டில் ஆகி படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அடுத்தடுத்து காதல் திருமணம், பின்னர் விவாகரத்து என்கிற செய்திகள் மூலம் தான் இவர் மீடியாக்களில் பரபரப்பாக தொடர்ந்து அடிபட்டு வருகிறார். அந்த வகையில் தனது இரண்டாவது திருமணம் முடிவுக்கு பிறகு மூன்றாவதாக டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு வருடங்களில் பிரிந்து, தற்போது நான்காவதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா.

அதே சமயம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் பாலாவிற்கும் அவரது மூன்றாவது மனைவியான டாக்டர் எலிசபெத்திற்கும் வார்த்தை போர் நடைபெற்று வந்தது. ஒரு கட்டத்தில் எலிசபெத், நடிகர் பாலா தன்னை மிரட்டுவதாகவும் குடும்ப வாழ்க்கை நடத்திய போது தன்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதாகவும் கூறி கடத்த சில மாதங்களுக்கு முன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் இருந்தபடி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் எலிசபெத்.

அதில் நீதிமன்றத்தின் வழக்கு தொடரந்தும் கேரள முதல்வரிடம் சென்று முறையிட்டும் கூட என் பிரச்சனை இன்னும் தீரவில்லை. நடிகர் பாலா என் மீது தொடர்ந்த தாக்குதல்கள், தற்போது விடுக்கும் மிரட்டல்கள், சோசியல் மீடியாவில் பரப்பும் அவதூறுகள் என எல்லாவற்றையும் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் இருக்கிறேன். ஆனால் அவர் நீதிமன்றத்தில் சொன்ன தேதியில் ஆஜர் ஆகாமல் தவிர்த்து வருகிறார் பாலா கடந்த முறை ஆஜரான போது அவரது வழக்கறிஞர் நடிகர் பாலா பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருப்பதாக கூறினார். இதே பாலா தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனக்கு 250 கோடி மதிப்புள்ள சொத்து இருப்பதாக வெளிப்படையாக கூறியிருந்தார்.

பொதுவாக பெண்கள் வெளியே வந்து தங்கள் பிரச்சனையை உரக்கச் சொன்னால் நீதி கிடைக்கும் என்று சொல்வார்கள். அதை நம்பித்தான் இதில் இறங்கினேன். ஆனால் அது எவ்வளவு தவறு என்பது இப்போதுதான் தெரிகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாமல் தான் இந்த நிலைக்கு நான் ஆளாகி இருக்கிறேன். ஒருவேளை இந்த வீடியோ வெளியானால் என்ன நிகழும் என்று தெரியாது. அதை பார்ப்பதற்கு நான் உயிரோடு இருப்பனா என்றும் தெரியாது. அப்படி எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் அதற்கு நடிகர் பாலாவும் அவரது குடும்பத்தினரும் தான் முழு பொறுப்பு என்று கூறியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதன் மூலம் மலையாளத் திரையுலகில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன் டாக்டர் எலிசபெத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்கிற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது. போலீஸ் இது குறித்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார்அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை ... கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in