‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கடந்த சில மாதங்களாகவே நடிகர் பாலா தனது திருமணம் தொடர்பான சர்ச்சைகளில் பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். தமிழில் அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உள்ளிட்ட சில படங்களின் நடித்த இவர் இயக்குனர் சிவாவின் தம்பியும் கூட. மலையாள திரையுலகில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து பிரிந்து தற்போது நான்காவதுதாக தனது உறவுக்கார பெண்ணான கோகிலா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் பாலா.
சமீப நாட்களாக இவரது மூன்றாவது மனைவி டாக்டர் எலிசபெத்துக்கும் இவருக்கும் சோசியல் மீடியாவில் வார்த்தை போர் நடந்து வந்து இப்போதுதான் ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை காதலிக்க விரும்பியதாக இன்னொரு புதிய தகவலையும் கூறியுள்ளார் நடிகர் பாலா.
இதுகுறித்து பாலா கூறும்போது, “அமெரிக்காவிலிருந்து இங்கே தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் வந்திருந்த பெண் ஒருவர் எனக்கு அறிமுகமானார். பார்ப்பதற்கு நடிகை திரிஷா போலவே இருப்பார். என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கம் காட்டிய அவர் என்னை பாலா சேட்டா என்று கூப்பிடும் அளவிற்கு வந்துவிட்டார். ஒருமுறை என் வீட்டுக்கு வந்தபோது அவர் என்னிடம் தனது காதலையும் சொன்னார். அப்போது தான் பக்கத்து அறையில் இருந்து கோகிலா வெளியே வந்தார்.
கோகிலாவை அந்த பெண்ணிடம் காட்டி இவருடன் சில மாதங்களாக நான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன். இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறியதும் அந்த பெண் கொஞ்சம் அப்செட் ஆனார். மீண்டும் என்னிடம் ஏதாவது நம் காதலுக்கு வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டுப் பார்த்தார். ஆனால் நான் கோகிலாவை சுட்டிக்காட்டி இந்த பெண் என்னை அவரது மூன்று வயதில் இருந்து விரும்பி கொண்டிருக்கிறாள். இனி அவள்தான் என் உலகம் என்று கூறியதும் எங்களை வாழ்த்தி விட்டு தன் மனதை தேற்றிக்கொண்டு கிளம்பி சென்றார்” என்று கூறியுள்ளார் பாலா.