கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் கிட்டத்தட்ட 10 வருடங்கள் வரை முன்னணி நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சோகைல் கத்துரியா என்பவரை 2022ல் திருமணம் செய்து கொண்டார். இன்னொரு பக்கம் ஹன்சிகாவின் சகோதரர் பிரசாந்த் மொத்வானிக்கும் 2020ல் முஸ்கான் நான்சி ஜேம்ஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதேசமயம் கருத்து வேறுபாடு காரணமாக 2022ல் கணவரிடம் இருந்து பிரிந்து தனியே வாழ்கிறார் முஸ்கான் நான்சி ஜேம்ஸ்.
இந்த நிலையில் தனது கணவருடன் சேர்ந்து ஹன்சிகா அவரது தாயார் ஆகியோர் தன்னை கொடுமைப்படுத்தியதாக கடந்த ஜனவரியில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து கிட்டத்தட்ட நான்கு பிரிவுகளில் ஹன்சிகா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகாவும், முஸ்கான் நான்சிக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் அளித்துள்ள மனுவில், தனது சகோதரரின் மனைவி முஸ்கான் நான்சி வேண்டுமென்றே தன் மீது பழி சுமத்தி புகார் அளித்துள்ளார் என்றும் தனது சகோதரர் பிரசாந்த் மற்றும் முஸ்கான் திருமணத்திற்காக 27 லட்சம் ரூபாய் கடன் வாங்கி நான் செலவு செய்தேன். அந்த பணத்தை முஸ்கானிடம் திருப்பி கேட்டதற்காக, தன்னை கொடுமைப்படுத்தியதாக கூறி என் பெயரையும் என் தாயார் பெயரையும் இந்த வழக்கில் இழுத்து விட்டுள்ளார். என் சகோதரருக்கும் முஸ்கான் நான்சிக்கும் நடந்த குடும்ப வாழ்க்கை சச்சரவுகளில் எனக்கு துளியும் தொடர்பு இல்லை. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார் ஹன்சிகா.