45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு | 22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் |
மலையாள திரை உலகில் பிரபல பாடகராக இருப்பவர் எம்ஜி ஸ்ரீகுமார். மலையாளத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள இவர் தமிழில் காதலர் தினம், என் சுவாச காற்றே, தாஜ்மஹால் உள்ளிட்ட சில படங்களிலும் பாடியுள்ளார். அது மட்டுமல்ல கிட்டத்தட்ட 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஏ.எல் விஜய் இயக்கிய பொய் சொல்ல போறோம் படத்திற்கு இசையமைத்தது கூட இவர்தான். இந்த நிலையில் இவர் வசிக்கும் வீட்டின் பின்புறம் ஓடும் ஆற்றில் இவர் வீட்டில் இருந்து குப்பை கொட்டப்பட்டதாக கூறி நகராட்சி நிர்வாகம் இவருக்கு 25000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராத தொகையையும் ஸ்ரீகுமார் கட்டிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.
சுற்றுலா பயணி ஒருவர் அந்த ஆற்றில் படகு பயணம் செய்த போது ஏதேச்சையாக எடுத்த வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அந்த வீடியோவில் தான் இப்படி ஸ்ரீகுமார் வீட்டிலிருந்து ஆற்றில் குப்பை கொட்டப்பட்ட காட்சி பதிவாகி இருந்தது. நகராட்சி அதிகாரிகளின் கண்களில் இந்த வீடியோ படவே இந்த வீடியோவை வைத்து விசாரித்து அது எம்ஜி ஸ்ரீகுமாரின் வீடு தான் என்பதை கண்டுபிடித்து அதன் பிறகு அபராதம் விதித்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது.