திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! |
மலையாள திரையுலகில் சீனியர் நடிகர்களில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்தபடியாக தற்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் நடிகர் திலீப். இவரது நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் நடிப்பிற்கு என குடும்ப ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களாக ஒரு நடிகையின் கடத்தல் வழக்கில் சிக்கி நிறைய பிரச்னைகளை சந்தித்த இவர், இன்னொரு பக்கம் தனது திரையுலக பயணத்திலும் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொண்டு சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார். அதே சமயம் கடந்த இரண்டு வருடங்களில் அவர் நடித்த படங்கள் எதுவும் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை.
இந்த நிலையில் தற்போது அவர் தனது 150வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வழக்கமான ஹீரோக்களின் 150ஆவது படங்கள் போல அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், குடும்பங்களுடன் பார்த்து ரசிக்கும் படமாகவே உருவாகிறது. இந்த படத்திற்கு தற்போது 'பிரின்ஸ் அண்ட் பேமிலி' என டைட்டில் வைக்கப்பட்டு திலீப்பின் பிறந்த நாளான நேற்று வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் திலீப்புடன் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் தியான் சீனிவாசனும் நடிக்கிறார். பின்ட்டோ ஸ்டீபன் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு போலி என்கவுண்டரை மையப்படுத்தி வெளியாகி கவனம் ஈர்த்த ஜனகனமன படத்திற்கு கதை எழுதிய ஷரிஷ் முகமது தான் இந்த படத்தின் கதையை எழுதியுள்ளார்.