வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

டாப்பில் உள்ள ஹீரோக்கள் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிப்பது இப்போது அதிகமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அரிதானதாக இருந்தது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாராஜ பாகவதர் 'தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சத்திய சீலன்' என்ற படத்தை 52 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தேவசேனா நடித்தார். எம்.ராமசாமி அய்யர் மன்னர் விக்ரமசிங்காக நடித்தார். பத்மாவதி பாய் ராணி வேதவல்லியாக நடித்தார். சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார், ஜானகி கவிகுஞ்சாராம் இசை அமைத்தார்.
ஜோதிபுரி என்ற கற்பனை தேசத்தின் மன்னர் திடீரென இறந்து விடுகிறார். இதனால் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ராஜினாமா செய்து விடுகிறார். இதனால் 3வது இடத்தில் இருந்த அமைச்சர் மன்னராக முயற்சிக்கிறார். ஆனால் மக்களோ இறந்த மன்னரின் மகனும், படைத் தளபதியுமான சத்யசீலனே மன்னராக வேண்டும் என்கிறார்கள். இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் சத்யசீலனை ஒழிக்க பல சதி வேலைகளை செய்கிறார் அமைச்சர். அதை முறியடித்து சத்ய சீலன் எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. சத்யசீலனாக தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரதி இப்போது இல்லை. சொல்லுபாப்பா... என்ற ஒரு பாடல் மட்டுமே தற்போது படத்திற்கு அடையாளமாக இருக்கிறது.




