ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
டாப்பில் உள்ள ஹீரோக்கள் சொந்தமாக படம் தயாரித்து அதில் நடிப்பது இப்போது அதிகமாக இருக்கிறது. அந்தக் காலத்தில் அரிதானதாக இருந்தது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாராஜ பாகவதர் 'தியாகராஜா டாக்கி பிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 'சத்திய சீலன்' என்ற படத்தை 52 ஆயிரம் ரூபாய் செலவில் தயாரித்து அதில் அவரே நடிக்கவும் செய்தார்.
இதில் அவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தேவசேனா நடித்தார். எம்.ராமசாமி அய்யர் மன்னர் விக்ரமசிங்காக நடித்தார். பத்மாவதி பாய் ராணி வேதவல்லியாக நடித்தார். சைலன் போஸ் ஒளிப்பதிவு செய்தார், ஜானகி கவிகுஞ்சாராம் இசை அமைத்தார்.
ஜோதிபுரி என்ற கற்பனை தேசத்தின் மன்னர் திடீரென இறந்து விடுகிறார். இதனால் இவருக்கு அடுத்த நிலையில் இருந்த அமைச்சர் ராஜினாமா செய்து விடுகிறார். இதனால் 3வது இடத்தில் இருந்த அமைச்சர் மன்னராக முயற்சிக்கிறார். ஆனால் மக்களோ இறந்த மன்னரின் மகனும், படைத் தளபதியுமான சத்யசீலனே மன்னராக வேண்டும் என்கிறார்கள். இதனால் தனக்கு இடையூறாக இருக்கும் சத்யசீலனை ஒழிக்க பல சதி வேலைகளை செய்கிறார் அமைச்சர். அதை முறியடித்து சத்ய சீலன் எப்படி மன்னர் ஆகிறார் என்பதுதான் படத்தின் கதை. சத்யசீலனாக தியாகராஜ பாகவதர் நடித்திருந்தார். இந்த படத்தின் பிரதி இப்போது இல்லை. சொல்லுபாப்பா... என்ற ஒரு பாடல் மட்டுமே தற்போது படத்திற்கு அடையாளமாக இருக்கிறது.