மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தலைநகரம், நான் அவன் இல்லை படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமாக பதிந்தவர் மலையாள நடிகை ஜோதிர்மயி. அன்வர், பிலால் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஜோதிர்மயி பல்வேறு பட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தற்போது வெளியாகி உள்ள போகன்வில்லா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பஹத் பாசில் மற்றும் குஞ்சாக்கோ போபன் இருவரும் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை இயக்கியுள்ளது ஜோதிர்மயியின் கணவரான இயக்குனர் அமல் நீரத் தான்.
இந்த படத்தில் இந்த முக்கிய கதாபாத்திரத்திற்காக வேறு எங்கும் ஒரு நடிகையை தேடாமல் தனது மனைவியையே நடிக்க வைக்க முடிவு செய்தாராம் அமல் நீரத். இந்த கதாபாத்திரத்திற்காக மொட்டை அடிக்க வேண்டும் என்றாலும் கூட அதுபற்றி கவலைப்படாமல் ஒப்புக்கொண்ட ஜோதிர்மயிக்கு படப்பிடிப்பில் நடனமாடும் காட்சிகளில் எப்படி சமாளிக்க போகிறோம் என்கிற பயம் வந்து விட்டதாம். நடனமாடி நீண்ட நாட்களாகி விட்டதாலும் சரியான உடற்பயிற்சி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதாலும் நடனம் ஆடுவதில் ஒரு தயக்கம் ஏற்பட்டதாம். அதற்கு பதிலாக எப்படியாவது கீழே விழுந்து காலை முறித்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு கூட எனக்கு யோசனை வந்தது என்று கூறியுள்ளார் ஜோதிர்மயி. இருந்தாலும் நடன இயக்குனர் கொடுத்த பயிற்சி மூலம் ஓரளவு சமாளித்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்.