இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கேடி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எம்கே தியாகராஜ பாகவதர். பேசாப் படமாக இருந்த சினிமா, பேசும் தமிழ் சினிமாவாக மாறிய பின் எம்கேடி-யின் படங்களுக்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது.
1934ம் ஆண்டு வெளிவந்த 'பவளக்கொடி' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். 14 திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். அதில் “பவளக்கொடி, நவீன சாரங்கதாரா, சத்யசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி, ஹரிதாஸ்” ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதிலும் 'ஹரிதாஸ்' படம் 1944ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி மூன்று தீபாவளியைப் பார்த்த படம் என்ற பெருமையுடன் 1946 தீபாவளி வரை ஓடியது.
அந்தக் காலத்தில் பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் என்பவர் அவரது பத்திரிகையில் சினிமா பிரபலங்களைப் பற்றி தாறுமாறாக எழுதியவர். அவர் ஒரு நாள் சென்னை, புரசைவாக்கத்தில் கத்தியால் குத்தப்பட்டு மறுநாள் மருத்துவமனையில் மரணமடைந்தார். அந்த வழக்கை விசாரித்த காவல் துறை, நடிகர் எம்கே தியாகராஜ பாகவதர், நடிகர் என்எஸ் கிருஷ்ணன், தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தது. 1944ம் ஆண்டு கைதாகி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட எம்கேடி, என்எஸ்கே தொடர்ந்து மேல் முறையீடு செய்து 1947ம் ஆண்டு விடுதலை பெற்றனர்.
அந்த வழக்குகளின் காரணமாக தனது சொத்துக்கள், பெயர், புகழ் அனைத்தையும் இழந்து வறுமைக்குத் தள்ளப்பட்டார் எம்கேடி. உடல்நலக் குறைவு ஏற்பட்டு 1959ம் ஆண்டு தனது 49வது வயதிலேயே மரணமடைந்தார் எம்கேடி.
அவருக்கு இன்று 114வது பிறந்தநாள். அதை முன்னிட்டு இயக்குனரும் நடிகருமான பார்த்திபன், “தமிழ்நாட்டின் முதல் சூப்பர்ஸ்டார். புகழின் உச்சம் கண்டவர். மிச்சமின்றி சுகபோக வாழ்க்கையை உண்டவர். பன்னீரில் குளித்து கண்ணீரில் முகம் துடைத்தவர். Last reel மிக மோசமான சோகம்! பாடமானது அவரது வாழ்க்கை. அதை படமாக்க திரைக்கதை கூட வைத்துள்ளேன்” என எம்கேடி பற்றிய பயோபிக் படத்தை எடுக்க வேண்டும் என்ற அவருடைய ஆசையை வெளியிட்டுள்ளார்.