புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது 100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஊடகங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதால் தற்போது ஊடகங்கள் மீது 356வது பிரிவின் கீழ் மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் எங்களது புகைப்படத்தை வெளியிட்டு ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி என்று நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் எங்களை தவறான கோணத்தில் சித்தரித்து செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.