பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, கடைசியாக 2023ல் தியேட்டரில் வெளியான 'சுகி' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஓடிடியில் மட்டுமே வெளியான 'போலீஸ் போர்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'கேடி - தி டெவில்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''சினிமாவில் கடினமான காலக்கடத்தில் இருக்கிறோம். இன்றைய சினிமாவில் ஆண் அல்லது பெண் பார்வையாளர்களில் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.
தற்போது சினிமாக்களை பார்க்க பல ஓடிடி தளங்கள் உள்ளதால் அவர்களது தேர்வு பிரிந்து கிடக்கிறது. அதனால் நடிகர்கள் சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும். பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது; இருமுனைக் கத்தியாக இருக்கிறது. படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.
சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்தேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு பாடலும் எனக்கு மைல்கற்கள்தான். சில படங்களில் நன்றாக நடித்தும் கவனம் பெறாமல் சென்றுள்ளது'' என்றார்.