மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி |
ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி, கடைசியாக 2023ல் தியேட்டரில் வெளியான 'சுகி' படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஓடிடியில் மட்டுமே வெளியான 'போலீஸ் போர்ஸ்' படத்திலும் நடித்திருந்தார். தற்போது 'கேடி - தி டெவில்' எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''சினிமாவில் கடினமான காலக்கடத்தில் இருக்கிறோம். இன்றைய சினிமாவில் ஆண் அல்லது பெண் பார்வையாளர்களில் கவனத்தை பெறுவதில் சிக்கல் இருக்கிறது. நல்ல கதைகளைதான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டார்கள்.
தற்போது சினிமாக்களை பார்க்க பல ஓடிடி தளங்கள் உள்ளதால் அவர்களது தேர்வு பிரிந்து கிடக்கிறது. அதனால் நடிகர்கள் சரியான தேர்வை மேற்கொள்ள வேண்டும். பல ஓடிடிகள் இருப்பது ஒரு வகையில் வரமும் சாபமும் ஆக இருக்கிறது; இருமுனைக் கத்தியாக இருக்கிறது. படங்களில் நடிக்காதபோதும் எனக்கு ஓடிடி ரசிகர்கள் ஆதரவு அளிக்கிறார்கள். ஓடிடி பார்வையாளர்களை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம்.
சில நேரங்களில் படங்கள் தோற்றாலும் பாடல் ஹிட்டாகும். அதனால்தான் இவ்வளவு காலங்கள் சினிமாவில் தாக்குப் பிடித்தேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு பாடலும் எனக்கு மைல்கற்கள்தான். சில படங்களில் நன்றாக நடித்தும் கவனம் பெறாமல் சென்றுள்ளது'' என்றார்.