புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
'கங்குவா' படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம் 'ரெட்ரோ'. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் இந்த படம் காதல் கலந்த கேங்ஸ்டர் கதையில் உருவாகி உள்ளது. வருகிற மே ஒன்றாம் தேதி திரைக்கு வரும் இந்த ரெட்ரோ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில், சூர்யாவும், ஜோதிகாவும் மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது தனது நெற்றில் குங்குமப் பொட்டு வைத்து, கழுத்தில் மாலை அணிந்த நிலையில் அந்த கோவில் கொடி கம்பத்தில் ஒரு மணியை கட்டுகிறார் ஜோதிகா. இன்னொரு புகைப்படத்தில் அவர் நெய் விளக்கு ஏற்ற, அருகில் சூர்யா நின்று கொண்டிருக்கிறார். இதேபோல் அந்த கோவிலில் பல இடங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இருக்கிறார் ஜோதிகா.